Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடம்பனில் யானைகளுக்கு மத்தியில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!!

கடம்பனில் யானைகளுக்கு மத்தியில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!!
, புதன், 2 நவம்பர் 2016 (11:37 IST)
'மஞ்சப்பை' ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் 'கடம்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால், நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆர்யாவை பெரிதும் பாராட்டினர்.

 
இந்த படத்தில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் ஆர்யா பல யானைகளுக்கு நடுவே ஓடி வருவது போல் அமைந்திருக்கும். இந்த சண்டைக்காட்சி தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளதாகவும், 100 ஸ்டண்ட் கலைஞர்களுடன் படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதற்கு முன்பே தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்ததாகவும், மழை காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு பாதியிலேயே வந்துவிட்டதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளையும், சண்டைக்காட்சியையும் படமாக்க படக்குழுவினர் மீண்டும் தாய்லாந்து சென்றுள்ளனர்.
 
இதனை தொடர்ந்து இப்படத்தின் சண்டைக்காட்சிக்காக ஆர்யா மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் யானைகளுடன் 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இயக்குநர் ராகவா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைபுலி எஸ்.தாணுவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு