ஆவடியில் குப்பைகளை அகற்றிய சூர்யா
ஆவடியில் குப்பைகளை அகற்றிய சூர்யா
சும்மா சீன் போடுறாரு என்றவர்களே கொஞ்சம் ஷாக் ஆகித்தான் போயிருக்கிறார்கள். எஸ் 3 படப்பிடிப்பில் பிஸியாக இருந்த சூர்யா, கிடைத்த மூன்று நாள் கேப்பில் ஆவடியின் மிகமோசமான குப்பைப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
குப்பைகளை இஷ்டப்பட்ட இடத்தில் கொட்டிவிடும் நகர மனப்பான்மைக்கு நடுவில், அதனை சுத்தம் செய்யும் ஆர்வம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து, பசுமை ஆவடி திட்டத்தின் கீழ் ஆவடி பகுதியை சுத்தம் செய்தார் சூர்யா.
நோட்டு பென்சில் தந்து செய்தித்தாளில் நாலு காலத்தில் செய்தி வரவைப்பதைவிட இப்படி இறங்கி வேலைப் பார்த்தால் வேடிக்கைப் பார்க்கிற ஒன்றிரண்டு பேராவது திருந்த வாய்ப்புண்டு.