Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் இளையராஜா? முன்னணி கதாநாயகர்களிடம் பேச்சுவார்த்தை!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:09 IST)
இளையராஜா பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இளையராஜா சூப்பர் ஸ்டார் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த போதே பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வந்தார். அலைகள் ஓய்வதில்லை தொடங்கி என்னுயிர் தோழன் வரை பல படங்களை தயாரித்த அந்த நிறுவனம் ஒரு கட்டத்தில் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்துக்கு உயிர்க் கொடுக்கும் முயற்சியில் இளையராஜா இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகிய முன்னணி கதாநாயகர்களிடம் தேதிகள் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களில் யாராவது ஒத்துழைக்கும் பட்சத்தில் பாவலர் கிரியேஷன்ஸ் மீண்டும் புத்துணர்ச்சியோடு வரும் என்று சொல்லப்படுகிறது.
Source வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments