Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் இசை மழையில் நனையவிருக்கும் சென்னை

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:07 IST)
தமிழ் திரையுலகில் அன்னக்கிளி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் இவர் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
தற்போது 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, பல ஆயிரக்கணக்கான சாகா வரம் பெற்ற பாடல்களை அவர் படைத்துவிட்ட போதிலும் தன் இசைப் பயணத்தை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உற்ப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக ’இசை ராஜா 75’ என்ற தலைப்பில் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை வரும் ஜனவரி மாதம்  நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக  நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  சங்கம் சார்பில் அதன் தலைவர் விஷால், நடிகர் பார்த்திபன்,மற்றும் நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து அடுத்த வருடம் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சிக்காக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments