Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: வழக்கை வாபஸ் பெறுகிறார் இளையராஜா!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (11:03 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய தனக்கு அனுமதி வேண்டும் என்று சமீபத்தில் இளையராஜா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகளே மனிதாபிமான அடிப்படையில் இளையராஜாவுக்கு ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டது 
 
இதனை அடுத்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் ஒரு சில நிபந்தனைகளுடன் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதித்தது என்ற செய்தி நேற்று வெளியானது. இந்த நிலையில் திடீரென இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனது பொருட்களை மட்டும் எடுத்து கொள்ள அனுமதித்தால் போதும் என்றும் தியானம் செய்யும் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவரது தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் இந்த திடீர் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments