Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

vinoth
வெள்ளி, 21 மார்ச் 2025 (09:28 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’Valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார்.

இதையடுத்து இந்தியா வந்த அவர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் இளையராஜாவுக்கு விரைவில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

திடீரனெ நிறுத்தப்பட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்.. பின்னணி என்ன?

விஷாலின் அடுத்தப் படத்தை இயக்கும் ரவி அரசு..!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தவறு… வருத்தம் தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments