Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (11:59 IST)
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஒருநாள் தியானம் செய்ய பிரசாத் ஸ்டூடியோவில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று அவர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வர இருக்கிறார் என்ற செய்தி தகவல் பரவியதை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ முன் பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது திடீரென இளையராஜா தனது பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளித்த இளையராஜாவின் செய்தி தொடர்பாளர் உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசைக்கருவிகளை எடுத்துச் செல்ல இசையமைப்பாளர் இளையராஜா தரப்பினர் வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும் இதுகுறித்து இளையராஜாவின் உதவியாளர் அனுப்பிய வீடியோவை பார்த்து அவர் மன உளைச்சலில் இருப்பதால் பிரசாத் ஸ்டுடியோவுக்கு அவர் வரவில்லை என்றும் என்று தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ முன் கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments