Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல: ஆண்ட்ரியா அதிரடி கருத்து

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (07:04 IST)
தனுஷுடன் ஆண்ட்ரியா நடித்த 'வடசென்னை' திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் 'மீடூ' விவகாரம் குறித்து ஆண்ட்ரியா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மீடூ விவகாரம் குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது: எனக்கு இது போன்ற ஒரு அனுபவம் இல்லை. நான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால், எனக்கு அவனை பிடித்திருந்தது என்று அர்த்தம். அதே போன்று தான் அவனுக்கும் என்னை பிடித்திருக்கும்.

ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கின்றார்கள், யார் இல்லை என்பதெல்லாம், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷய்ம். படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. ஆனால், இதில் நாம் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறோம். தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்.

பெண்கள் முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படியிருந்தால், யாரும் அவர்களை நெருங்க முடியாது. தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் கிட்ட நெருங்கத்தான் செய்வார்கள். இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்தூள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments