Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதைச் செய்ய மாட்டேன் – கார்த்தி

Webdunia
புதன், 26 மே 2021 (20:46 IST)
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்கள் இருந்தாலும் குறைந்த மற்றும் தரமான படங்களில் நடித்தவர் என்ற புகழ்படைத்தவர் நடிகர் கார்த்தி. இவர் தனக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் பருத்திவீரன்.  இப்படத்தில் நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இப்படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகரானார். பின்னர், பையா, கொம்பன், அலெக்ஸ்பாண்டியன், கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெற்றி பெற்ற படம். சுல்தான். கலவையான  விமர்சனம் பெற்றாலும் நல்ல வசூல் ஈட்டியது.

இந்நிலையில்,  கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் 20 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகர் கார்த்தி, தன் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறார்.  தற்போது இதுகுறித்துக் கூறியுள்ள கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் தன் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கார்த்தியைப் புகழ்ந்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments