சினிமாவில் இந்தக் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்- நடிகை சமந்தா

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:10 IST)
சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை சமந்தா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது, காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். இந்த படம்  இன்று ரிலீஸாகி இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில்,தன் 10 வருடங்களுக்கு மேலான சினிமா வாழ்க்கையில், இடத்தனைந்தூரம் வருவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், இன்று இப்போது என்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமாவில், கதாநாயகி ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்போது, ஒரு ஹீரோ வந்து காப்பாற்றும் வழக்கமான கதையை தேர்வு செயயாமல்,  வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில்  தைரியமான கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments