Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸிடம் கெஞ்சினேன்: ராஜினாமா செய்த பாக்யராஜ் உருக்கம்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (13:33 IST)
சர்க்கார் பட விவகாரத்தில் முருகதாஸிடம் பலமுறை கெஞ்சியதாக பாக்யராஜ் தெரிவித்திருக்கிறார்.
சர்கார் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறினார்.
 
இதனையடுத்து நீண்ட இழுபறிக்குப் பிறகு சர்கார் கதை திருட்டு விவகாரத்தை ஒப்புக்கொண்ட இயக்குனர் முருகதாஸ் வருண் ராஜேந்திரன் பெயரை படத்தில் போடவும் அவருக்கு சன்மானமான 30 லட்சம் ரூபாயும் அளிப்பதாக ஒப்புக்கொண்டார்.
 
இந்த விஷயத்தில் தாம் ரொம்ப காயப்பட்டதாக பாக்யராஜ் தெரிவித்திருந்த நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் தனது தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். 
 
இதுகுறித்து பேசிய பாக்யராஜ், சர்க்கார் விவகாரத்தில் தாம் ரொம்ப சிரமப்பட்டதாகவும், இந்த விஷயத்தில் சுமூகமாக போகலாம் என முருகதாஸிடம் கெஞ்சியபோதும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
 
போட்டியின்றி இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், சர்க்கார் விவகாரத்தில் தாம் நிறைய அவமானங்களை சந்தித்ததாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என பாக்யராஜ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments