Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து தினங்களில் இந்தியாவில் 100 கோடியை தாண்டிய ஐ

Webdunia
புதன், 21 ஜனவரி 2015 (12:14 IST)
ஷங்கரின் ஐ ஐந்து தினங்களில் இந்தியாவில் 100 கோடியை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.
 
ஐ படத்தின் வசூல் குறித்து இதுவரை தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடவில்லை. அதேநேரம், படம் ஐந்து தினங்களில் 100 கோடியை தாண்டியதாக படம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஐ ஐந்து தினங்களில் 40 கோடியை வசூலித்துள்ளது. கேரளாவில் 10.7 கோடிகள். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஐ -இன் தெலுங்குப் பதிப்பு 30 கோடிகளை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் சுமாராக பத்து கோடிகள். இந்திப் பதிப்பு சுமார் பத்து கோடிகள்.
 
இந்த உத்தேச கணக்கே 100 கோடிகளை தாண்டுகிறது. வெளிநாடுகளிலும் ஐ சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. 100 கோடிகளை தாண்டும் ஷங்கரின் 3 -வது படம் ஐ. விக்ரமுக்கு இது முதல் 100 கோடி படம்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments