Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அரவிந்த் சாமியால் எனக்கு வருத்தம் இல்லை” – நட்டி

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (14:26 IST)
‘சதுரங்க வேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமி நடிப்பதால், தனக்கு வருத்தம் எதுவும் இல்லை எனத்  தெரிவித்துள்ளார் நட்டி.

 
நட்டி, இஷாரா நாயர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதை, நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.  வினோத் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட்.
 
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. வினோத் கதை எழுத, நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமியும், த்ரிஷாவும் ஜோடியாக நடித்துள்ளனர். முதல் பாகத்தைத் தயாரித்த மனோபாலாவே இந்தப்  படத்தையும் தயாரித்துள்ளார்.
 
‘இந்தப் படத்தில் நடிக்காததில் உங்களுக்கு வருத்தமில்லையா?’ என்று நட்டியிடம் கேட்டால், “என்னுடைய கேரக்டரில் அரவிந்த் சாமி நடிப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்தக் கதைக்கு நான் தேவைப்படாமல் போயிருக்கலாம். இரண்டாம் பாகம் போனால் என்ன… மூன்றாம், நான்காம் பாகங்களில் நடித்துக் கொள்ளலாம்” என்று பதிலளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments