Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை

எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை
, திங்கள், 23 ஜூன் 2014 (11:06 IST)
அனிருத்தும், நானும் நண்பர்களாகதான் பழகுகிறேnம். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என அனிருத்தை காதலிப்பதாக வெளியான வதந்தியை ப்ரியா ஆனந்த் மறுத்துள்ளார்.
ப்ரியா ஆனந்த் விளம்பரத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அதனால்தானோ என்னவோ அவர் யாருடன் படம் நடித்தாலும் அவரை காதலிப்பதாக ஒரு பிளாஷ் எப்போதும் நடுவில் வந்து செல்லும்.
 
இரும்புகுதிரையில் அதர்வாவுடன் நடித்து வருகிறார் ப்ரியா ஆனந்த். படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதாகவும், ப்ரியா ஆனந்துடனான காதலால் அதர்வாவின் குணமே மாறிவிட்டது, வளர்ந்து வருகிற நேரத்தில் அதர்வாவுக்கு இந்த காதல் தேவைதானா என்று வதந்தியுடன் அவருக்கு அறிவுரை செய்து செய்தி வெளியானதால் இந்த காதலை உண்மை என்றே பலரும் எண்ணினர். இந்நிலையில் அதர்வா இடத்தை அனிருத் பிடித்துக் கொண்டார். இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியாயின.
 
அனிருத் ஏற்கனவே ஆண்ட்ரியாவின் உதட்டை கடித்து பிரபலமாகியிருந்தபடியால் இந்த கிசுகிசுக்கு கூடுதல் சுவாரஸியமும் இருந்தது. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் தனது மறுப்பை தெரிவித்துள்ளார். அனிருத்தும் நானும் காதலிப்பதாக வெளியான செய்தியில் துளி உண்மையில்லை. நாங்களிருவரும் நண்பர்களாகதான் பழகி வருகிறேnம். எங்களுக்குள் வேறு எந்த உறவுமில்லை என கொழுந்துவிட்டரிந்த நெருப்பின் கொள்ளியை பிடுங்கிப் போட்டுள்ளார்.
 
இனி அடுத்த கிசுகிசு வரும்வரை வெயிட் பண்ணுவோம்.

Share this Story:

Follow Webdunia tamil