Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரத்குமார் அணியினருக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை - விஷால்

சரத்குமார் அணியினருக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை - விஷால்
, புதன், 7 அக்டோபர் 2015 (21:58 IST)
சரத்குமார் அணியினர் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னையில் சரத்குமார் அணியினர் செய்தியாளர்களை சந்தித்திப்பை நடத்தினர். அந்த கூட்டத்தில், நடிகை ராதிகா சரத்குமார், சிம்பு, இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
அப்போது விஷால் அணியினர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளை சிம்பு உள்ளிட்டோர் சுமத்தினர். இது குறித்து கேள்வி எழுப்பியபோது சரத்குமார் அணியினர் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று விஷால் கூறியுள்ளார்.
 
மேலும், நடிகர் சங்க தேர்தலில் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்றும் நாளை முதல் திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க போவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil