Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதிய திரைக்கதையை வாசித்து அழுதுவிட்டேன்- ராஜமெளலி

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (20:57 IST)
ஆர்.எஸ்.எஸ் குறித்து என் தந்தை எழுதியிருக்கும் திரைக்கதையை நான் வாசித்தபோது அழுதுவிட்டதாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
 

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர், நான் ஈ, மகதீரா, பாகுபலி1-2, .ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, மகேஷ்பாபு நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையில், இவர் இயக்கத்தில், ஜூனியர் என்டி.ஆர்.  ராம்சரண் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி, வசூல் குவித்துள்ள, ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற பாடல் நாட்டுகுத்து ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குத்தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி ஒரு கதையை உருவாக்கும் முனைப்பில் ராஜமெளலி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கான திரைக்கதையை அவரது தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு  பேட்டியளித்தார். அதில், ''ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி எனக்கு தெரியாது. இந்த அமைப்பு பற்றி கேள்விதான் பட்டிருகிறேன். இதன் வளர்ச்சி பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி என் தந்தை எழுதிய திரைக்கதையை வாசித்தபோது பலமுறை அழுதுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''இந்தக் கதையை நான் இயக்குவேனா என்று தெரியாது. ஒருவேளை இக்கதையை எழுதினால் நான் பெருமப்படுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments