Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தப் படத்தில் நான் அழுது நடித்தேன் - நடிகர் சிம்பு உருக்கம் !

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (22:14 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
 
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் #Meherezylaa என்ற பாடலின் டீசரை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்யிருந்த நிலையில் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று யுட் ரெக்கார்ட்ஸ் என்ற யூடியூப் தளத்தில் வெளியாகி இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்போது அவர் மனம்விட்டுப் பேசினார். அதில்,  மன்மதன் படத்திற்குப் பிறகு மாநாடு  படத்தில்தான்  அழுது நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தான் மது அருந்துவதை விட்டு  ஓராண்டு ஆவதாகவும் கூறியுள்ளார்.
 
சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்த சிம்பு பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தில் ஸ்லிமாகக் காட்சியளித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments