Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ருசியாக சமைப்பேன் என்று சுருதிஹாசன் சொல்கிறார்

நான் ருசியாக சமைப்பேன் என்று சுருதிஹாசன் சொல்கிறார்
, சனி, 5 டிசம்பர் 2015 (12:23 IST)
சமீபத்தில் வெளிவந்துள்ள வேதாளம் படத்தில் நடித்துள்ள சுருதிஹாசன் தற்போது சிங்கம-3 படத்தில் நடிக்கிறார். மேலும் இந்திப் படம், தெலுங்கில் இரண்டு படம் கைவசம் உள்ளன.


 

 
இசை, பாடல், ஓவியம், நடிப்புகளில் தன் திறமையை வெளிப்படுத்திய சுருதிஹாசன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ருசியாக சமைக்க தெரியும் என்றும், படப்பிடிப்பு இல்லாத சமையங்களில் சமையல் கட்டில்தான் என்னை பார்க்க முடியும் என்கிறார்.
 
வெளியில் ஓட்டல்களில் சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவுகளை சுவைத்து, அவற்றை பற்றி குறிப்பெடுத்துக் கொள்வேன். அவற்றில் என்னென்ன மசாலா சேர்த்து சமைக்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்வேன். வீட்டுக்கு வந்ததும் அதுபோல் சமைத்து பார்ப்பேன்.
 
நான் கவனமாக இருந்து தேவையான அளவு மசாலாவை சேர்ப்பேன். சமைக்கும்போது எல்லா பொருட்களையும் சமையல் அறையில் அப்படியே போட்டு விடுவேன். பிறகு அவற்றை எடுத்து மீண்டும் அடுக்கி வைப்பதுதான் எனக்கு பிடிக்காத விஷயம். இவ்வாறு சுருதிஹாசன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil