Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

vinoth
வெள்ளி, 16 மே 2025 (13:20 IST)
தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு ஒரே நேரத்தில் அதிகப் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது ‘Dawn Pictures’. இதன் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தனுஷின் நடிப்பில் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயன் நடிப்பில் “பராசக்தி’ மற்றும் சிம்பு 49 ஆகியப் படங்களைத் தயாரித்து வருகிறார். மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அதர்வா முரளியை வைத்து ‘இதயம் முரளி’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியும் வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரித்து கோலிவுட்டையே ஆச்சர்யப்பட வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதல் இவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம்சேஞ்சர் படுதோல்வி… மீண்டும் இணையும் தில் ராஜு & ராம்சரண்!

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா?... வெளியான தகவல்!

கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன் லாலின் மகள் விஸ்மயா!

முடிந்தது இராமாயணம் முதல் பாக ஷூட்டிங்! படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரன்பீர்!

மாரி செல்வராஜ் ஷாருக் கானை வைத்துப் படம் இயக்க வேண்டும்- இயக்குனர் ராம் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments