Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுதாண்டா நற்பணி - தத்தெடுத்த குழந்தைகளுக்கு வீடு கட்டும் ஹன்சிகா

இதுதாண்டா நற்பணி - தத்தெடுத்த குழந்தைகளுக்கு வீடு கட்டும் ஹன்சிகா
, வியாழன், 29 ஜனவரி 2015 (09:33 IST)
பென்சில் பேனா கொடுக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் இரண்டு டஜனுக்கும் அதிகமான குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் உடை, உணவு, தங்குமிடம், படிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளை கவனித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. இவரின் வயதைவிட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை இவர் தத்தெடுத்து பராமரித்து வருகிறார் என்பதே ஒரு சாதனைதான்.
கடந்த கோடை விடுமுறையில் அந்தக் குழந்தைகளை குலுமணாலி போன்ற இடங்களுக்கு ஹன்சிகா சுற்றுலா அழைத்துச் சென்றார். மேலும், அவர்களுக்கு என சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது அவரது நீண்டநாள் கனவு. அதன் ஒருபடியாக, மும்பைக்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் விரைவில் அவர் தான் தத்தெடுத்த சிறுவர் சிறுமிகளை தங்க வைக்க பிரமாண்ட கட்டடம் கட்ட உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil