தமிழில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொம்பு முளைத்துள்ளதாக நினைக்கின்றனர்.
அதிலும் கொஞ்சம் பிரபலம் கிடைத்துவிட்டால் போதும். இவர்களுக்கு தலைகால் புரியாது. முக்கியமாக அடுத்தவர்களின் கஷ்டம்.
பிரபலங்களின் அனைத்து ராவடிகளையும் தலையால் சுமக்க தமிழ் சினிமா தயாராக உள்ளது. ஆனால், தெலுங்கு கன்னடத்தில் அப்படியில்லை.
சமீபத்தில் அஞ்சலி ஒரு கன்னடப் படத்தில் ஒப்பந்தமானார். தர்ஷன் நாயகன். முதல்நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் காத்திருக்க அஞ்சலி மட்டும் வரவில்லை. கடைசியாக பல மணிநேர தாமதத்துக்குப் பின் வருகை தந்தார். தமிழில் என்றால் உட்கார வைத்து ஜுஸ் கொடுத்திருப்பார்கள். ஆனால் இது கன்னடமாயிற்றே.
உங்க கலைச்சேவை போதும்மா... இந்த படத்துல நீங்க நடிக்கலை என்று அங்கேயே வழியனுப்பி வைத்தனர்.
இந்த மானமும் ரோசமும் தமிழ் சினிமாவுக்கு சித்திக்குமா?