Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா.. ‘பருத்தி வீரன்’ பிரச்சனை முடிந்தது..!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (10:55 IST)
கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஞானவேல் ராஜா அமீர் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார்

இதற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

  ‘பருத்தி வீரன்’பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப்பற்றி பேசியதில்லை, என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்.

ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்’

இந்த அறிக்கையை அடுத்து அமீர், ஞானவேல் ராஜா இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது, தயாரிப்பது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments