தன்னுடைய மகளுக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை என்றும், அவள் படிப்பிலேயே கவனம் செலுத்துகிறாள் என்றும் நடிகை கவுதமி கூறியுள்ளார்.
13 வருடம் நடிகர் கமல்ஹாசனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த கவுதமி, அவரை விட்டு சமீபத்தில் பிரிந்தார். தன் மகளின் எதிர்காலம் குறித்து, அந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
அந்நிலையில், அவருடைய மகள் சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், நடிகர் தனுஷிடம், மகளுக்காக அவர் வாய்ப்பு கேட்டு சென்றதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், அப்படி வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்றும், தன்னுடைய மகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், நடிப்பில் இல்லை என்று அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.