Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தது கௌதம் படம் - வடசென்னையை ஆஃப் செய்த தனுஷ்

அடுத்தது கௌதம் படம் - வடசென்னையை ஆஃப் செய்த தனுஷ்

அடுத்தது கௌதம் படம் - வடசென்னையை ஆஃப் செய்த தனுஷ்
, வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (14:53 IST)
தனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரியின் வெற்றி, எப்படி நடித்தாலும் படம் ஓடும் என்ற எண்ணத்தை தனுஷிடம் ஏற்படுத்தி, மாரி, தங்கமகன் போன்ற படங்களில் நடிக்க வைத்தது.


 


இரண்டும் பிளாப். கண்டிப்பாக ஹிட் தந்தாக வேண்டும் என்ற நிலையில் ஓரளவு சின்சியராக அவர் நடித்து வரும் படம்தான், கொடி.
 
இதையடுத்து வடசென்னையில் நடிப்பார் என்ற வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கொடிக்குப் பிறகு கௌதம் படம் என தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிவரும் கௌதம், அடுத்து தனுஷ், ஜெயம் ரவி நடிப்பில் தலா ஒரு படம் இயக்குகிறார். தனுஷ் நடிக்கும் படத்துக்கு என்னை நோக்கி பாயும் தோட்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது தனுஷும், கௌதம் படத்தில் முதலில் நடிக்கிறேன் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil