Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொமாண்டிக் கதையில் சந்தானம்… இயக்குனராக கௌதம் மேனன்!

vinoth
புதன், 7 மே 2025 (12:42 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின்னர் அவர் தயாரிப்புப் பணிகளில் கால்பதித்ததால் இயக்குனராக பின்னடைவை சந்தித்தார். அவர் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதையடுத்து அவர் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து ‘டாம்னிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்றொரு படத்தை இயக்கினார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தமிழில் அவர் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கௌதம் மேனன் சந்தானத்தைக் கதாநாயகனாக வைத்து ஒரு ரொமாண்டிக் கதையை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்யா தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சந்தானத்தில் ‘டெவில்ஸ் டபுள்- நெக்ஸ்ட் லெவல்’ என்ற படத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'கூலி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அன்றலர்ந்த மலர் போல அள்ளும் அழகில் க்யூட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் வில்லனாகும் தெலுங்கு நடிகர்!

அசோக் செல்வன் & நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் … பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments