Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக அளவில் 500 கோடி வசூலித்த பாகுபலி - இந்திய அளவில் மூன்றாவது இடம்

உலக அளவில் 500 கோடி வசூலித்த பாகுபலி - இந்திய அளவில் மூன்றாவது இடம்
, திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (17:45 IST)
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம், உலக அளவில் 500 கோடிகளை வசூல் செய்ததாக பிரபல ஃபோர்பஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 

 
இந்தியாவில் தயாராகும் படங்களில் இந்தி மொழிப் படங்களே அதிகம் வசூல் செய்கின்றன. விதிவிலக்காக ஷங்கரின் எந்திரன் நல்ல வசூலை பெற்றது. ஆனாலும் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற எந்திரனால் முடியவில்லை.
 
ராஜமௌலியின் பாகுபலி அதிரடியாக 500 கோடிகள் வசூல் செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமீர் கானின் பிகே திரைப்படம் உலகம் முழுவதும் 740 கோடிகளை வசூல் செய்து முதலிடத்திலும், அவரது தூம் 3 படம் 540 கோடிகள் வசூலித்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாகுபலி 500 கோடிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
சமீபத்தில் வெளியான சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் இப்போதுதான் 400 கோடிகளை கடந்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil