Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிக் களிப்பில் அடுத்த ஆட்டத்திற்கு தயாரான வெங்கட் பிரபு!!

வெற்றிக் களிப்பில் அடுத்த ஆட்டத்திற்கு தயாரான வெங்கட் பிரபு!!
, வெள்ளி, 16 டிசம்பர் 2016 (15:25 IST)
'சென்னை 28' படம் வெற்றியைத் தொடர்ந்து மங்காத்தா, பிரியாணி, மாஸ் என முன்னணி நாயகர்களை வைத்து படம் இயக்கும் அளவுக்கு வெங்கட் பிரபு வளர்ந்தார். ஆனால் மங்காத்தா தவிர்த்து, மற்ற படங்கள் வெற்றிபெறவில்லை. தனது மார்கெட்டை தக்க வைக்க, மீண்டும் சென்னை 28 இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிட்டார்.

 
சென்னை 28 இரண்டாம் பாகம் எதிர்பார்த்ததைப் போல நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த படம் வெளியாகி பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில், தனது அடுத்த படத்திற்கான பூஜையை இன்று காலை நடத்தியுள்ளார் வெங்கட் பிரபு. 
 
இந்த புதிய படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கே.எல். பிரவீன் படத் தொகுப்பு பணிகளை செய்ய இருக்கிறார். படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இது சென்னை 28-ன் மூன்றாவது பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கர் விருது பட்டியலில் விசாரணை படம்??