Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஆளாக விருதுபெற்ற இளையராஜா

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (09:27 IST)
பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், முதல் ஆளாக இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. 
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். இந்த  விழாவில், முதல் ஆளாக ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவர் பெற்றுக்  கொண்டார்.
 
தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் பாரிக், நாட்டுப்புற பாடகர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, யோகா கலைஞர் நானம்மாள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
 
இந்த விழாவில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்மபூஷண் விருதும், 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments