Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடிப்பெருக்குடன் படப்பிடிப்பை முடித்த ரெமோ படக்குழு

ஆடிப்பெருக்குடன் படப்பிடிப்பை முடித்த ரெமோ படக்குழு

ஆடிப்பெருக்குடன் படப்பிடிப்பை முடித்த ரெமோ படக்குழு
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (15:37 IST)
ஆடிப்பெருக்குடன் ரெமோ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.


 
 
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ராஜா தயாரிக்க, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாராகிவரும் படம், ரெமோ. இதன் பர்ஸ்ட்லுக்கை ஜுன் 23 -ஆம் தேதி ஷங்கர் வெளியிட்டார். படத்தில் பெண்ணாக வரும் சிவகார்த்திகேயனின் தோற்றம் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அனிருத் இசையமைக்க, இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு அன்று படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தார் பாக்யராஜ் கண்ணன். அதனை முன்னிட்டு பி.சி.ஸ்ரீராமுக்கு படக்குழு மாலை அணிவித்து மரியாதை செய்தது.
 
அக்டோபர் 7 -ஆம் தேதி ரெமோ திரைக்கு வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனு ராமசாமியை முட்டாள் என்றே நினைத்திருந்தேன் - பாலா