Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா மோதல் படக்குழுவினர் அதிருப்தி

நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா மோதல் படக்குழுவினர் அதிருப்தி

நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா மோதல் படக்குழுவினர் அதிருப்தி
, வெள்ளி, 29 ஜூலை 2016 (13:07 IST)
நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நயன்தாரா மீது பட அதிபர் சங்கத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.



 

நயன்தாரா, தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஜீவா ஜோடியாக நடித்த திருநாள் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இருமுகன், காஸ்மோரா, டோரா ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக ‘பாபு பங்காராம்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் வெங்கடேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, படத்தில் உள்ள நயன்தாரா, வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியில் ஏற்கனவே அளித்த கால்ஷீட்டுகளை படக்குழுவினர் விரயம் செய்து விட்டதாக கூறி  நடிக்க மறுத்து விட்டார். வேறு வழியின்றி பாடல் காட்சியை படமாக்காமலேயே படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு நயன்தாராவை அழைத்தனர். ஆனால் அந்த விழாவிலும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார். நயன்தாராவின் நடவடிக்கைகள் வெங்கடேசுக்கும் படக்குழுவினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளிக்க ஆலோசித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கூறிய அந்த வார்த்தை: கலைப்புலி தாணு உருக்கம்