Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப்புக்கு வந்து விளக்கம் அளியுங்கள் –நடிகை ஹேமமாலினிக்கு விவசாயிகள் கடிதம்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (17:20 IST)
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நடிகை ஹேமமாலினி அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவை தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் குறித்து பேசிய நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினி ‘விவசாயிகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போராடுகின்றனர்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு விவசாயிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ‘வேளாண் சட்டங்களில் என்ன உள்ளது என்பது குறித்து பஞ்சாப்புக்கு வந்து விளக்கமளியுங்கள். பயண செலவு அனைத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments