Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகை அளித்த பரிசால் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (17:15 IST)
சிவகார்த்திகேயனை ரசிகை ஒருவர் கண்கலங்க வைத்துள்ளார். அப்படி என்ன பரிசு தந்திருந்திருந்தால் சிவகார்த்திகேயன் கண் கலங்கியிருப்பார்?
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து கோலிவுட்டை அசர வைத்தவர் சிவகார்த்திகேயன். குட்டீஸ்களின் மனதில் ரஜினி, விஜய்யை அடுத்த இடத்தில் உள்ளார். சமீப காலமாக நடிப்பு தவிர படத் தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.தான் ஒவ்வொரு முறையும் விருது வாங்கும்போதும், இதனை பார்க்க தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தத்தை அவரே பல இடங்களில் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது தந்தையுடன் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் வரைந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  சிவகார்த்திகேயனின் ஆசையை ஓவியம் மூலம் நிறைவேற்றி வைத்துள்ளார் ரசிகை.
இதை பார்த்த சிவகார்த்திகேயன் ட்வீட்டரில், உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், எமோஷனலாகவும் உள்ளது.  அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. இது எனக்கு ஸ்பெஷலானது. நன்றி மா. தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே... என்று பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments