Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா வசனகர்த்தா கிரேஸி மோகன் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (13:57 IST)
தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசிரியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணாமாக, தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.
தமிழ்சினிமாவில் பிரபலமான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா கிரேஷி மோகன். இவர் ஏராளமான சினிமா படங்களுக்கு சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்றுள்ளார்.
 
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா படத்திற்கு சிறந்த முறையில் நகைச்சுவையாக வசனம் எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
சமீபத்தில் கூட சென்னையில் அவர் நாடகத்தை எழுதி இயக்கி மேடையில் அரங்கேற்றினார். அதில் அவரது எழுத்துக்கும் நகைச்சுவை வசனத்துக்கும் ஏராளமான நடிகர்கள் , இயக்குநர்கள் ரசிர்கர்களாக இருக்கின்றனர்.
 
இந்நிலையில் கிரேஷி மோகன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவர் விரைவில்  நலம்பெற வேண்டுமென அவரது ரசிகர்களும்,  மக்களும் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது 2 மணி அளவில்  இறந்தார். அவருக்கு வயது 66 ஆகும். கே பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற படத்தில், கிரேஸி மோகனை வசனகர்த்தாவாக சினிமாவில்  அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments