Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தில் இருந்து பஹத் பாசில் விலகியது ஏன்?

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (18:21 IST)
மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இருந்து பஹத் பாசில் விலகியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மல்ட்டி ஸ்டாரர் படத்தை மணிரத்னம் இயக்குவதாக இருந்தது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, பஹத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
இந்த மாதம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு படத்தின் பெயர் ‘செக்கச் சிவந்த வானம்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
பஹத் பாசில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் இந்தப் படத்தில் இடம்பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பஹத் பாசிலின் முதல் தமிழ்ப் படமான ‘வேலைக்காரன்’ படத்தில் பஹத்தின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments