நெட்பிளிக்ஸில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்.. எப்போது தெரியுமா?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (13:39 IST)
சூர்யா நடிப்பில் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 10 ஆம் தேதி சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலிஸானத். இந்த படம் ஆரம்பம் முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.

ஆனால் அதே நேரம் வசூலில் சோடை போகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்தை நெருங்க உள்ள நிலையில் இப்போது ஓடிடி தளத்தில் பிரீமியர் ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments