Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் தகராறு செய்த நடிகர் பாபி சிம்ஹா

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (11:13 IST)
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் தகராறு செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், கார்த்தி  சுப்பராஜ் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று தனது நண்பர் கருணா என்பவருடன் சென்னை கிண்டி ஈக்காட்டு தாங்கலில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகி பாரில் இருந்த மற்றவர்களை கண்டபடி பேசியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து பாபிசிம்ஹாவிற்கும் அவரது நண்பருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தகராறில் ஈடுபட்ட பாபி சிம்ஹா மற்றும் கருணாவை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments