Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள்: அரவிந்த் சாமி

விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள்: அரவிந்த் சாமி
, வெள்ளி, 17 ஜூன் 2016 (06:05 IST)
விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் சாமி காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். இப்படத்தில் நடித்தமைக்காக அரவிந்த் சாமிக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அரவிந்த் சாமிக்கு விருது குவிந்த வண்ணம் உள்ளன.
 
இந்நிலையில் அரவிந்த் சாமி, சில விருதுகள் கேலிக்கூத்தானவை, நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைக்கும்போதே சொல்வார்கள் நீங்கள் ஒரு விருது பெற்றுள்ளீர்கள். அப்போது நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள் என்னால் நிகழ்ச்சிக்கு வரமுடியாது விருதை வேறு யாருக்காவது வழங்குங்கள். எல்லா நடிகர்களும் அவர்களுடைய உழைப்புக்காக விருது பெற தகுதியானவர்களே.
 
எனவே நீங்கள் விரும்பும் யாராவது ஒருவருக்கு அந்த விருதைக் கொடுங்கள். விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள், என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், எந்த விருது வழங்கும் விழாவுக்காக இப்படி கருத்து பதிவிட்டுள்ளார் என்பதை குறிப்பிடவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி.. நெருப்புடா பாடல் டீசர் : கலக்கல் வீடியோ