Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கும் இளையராஜாவுக்கும் உள்ள விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி. உருக்கம்

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (13:00 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தனது பாடலை பாடியமைக்காக எஸ்.பி.பி., மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார்.


 

இதனையடுத்து, இனிமேல் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், “எனது அனைத்து நண்பர்கள், இசைப் பிரியர்கள் முக்கியமாக அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இளையராஜா - எஸ்.பி.பி. விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம். அனைத்தும் முடிந்துவிட்டது. நிகழ்ச்சிகள் நடந்தாக வேண்டும். வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும். கடவுளின் படைப்பில் அனைத்தும் நல்லவையே, சமமானவையே! நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'கூலி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அன்றலர்ந்த மலர் போல அள்ளும் அழகில் க்யூட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் வில்லனாகும் தெலுங்கு நடிகர்!

அசோக் செல்வன் & நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் … பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments