Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் - பார்வதி

Webdunia
சனி, 5 மே 2018 (10:32 IST)
தேசிய விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெறமுடியாதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகை பார்வதி கூறியுள்ளார்
சமீபத்தில் 65வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் டூ லெட், பாகுபலி, மலையாள நடிகை பார்வதி, மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. 
 
பொதுவாக தேசிய விருதை ஜனாதிபதிதான் கொடுப்பார். ஆனால், இந்த முறை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 11 பேருக்கு மட்டுமே கொடுப்பார். மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இராணி அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனால் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
 
இந்நிலையில் நடிகை பார்வதி ‘டேக் ஆப்’ என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதுபற்றி பேசிய பார்வதி தேசிய விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெறமுடியாதது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments