Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கதையோட ஒரு படம் பண்ணுங்க சார்…” என்ன இப்படி கலாய்ச்சுக்குறாங்க- வைரல் ட்வீட்ஸ்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (09:07 IST)
இயக்குனர்கள் சி எஸ் அமுதன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ட்வீட்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

தமிழின் முதல் முழு நீள ஸ்பூப் படமாக உருவான தமிழ்ப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது அவர் வெளியிடும் நகைச்சுவையான சமூகவலைதளப் பதிவுகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் வெங்கட்பிரபு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் முதல் பிரஷ்ஷான கதையான ‘கொலை’ திரைப்படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்.” எனக் கூறினார். அவருக்கு பதிலளித்த அமுதன் “நன்றி சார். நீங்களும் கதையுடன் ஒரு படம் பண்ணுங்கள்” எனக் கூறி பதிலளித்தார்.

அடுத்து அவருக்கு பதிலளித்த வெங்கட்பிரபு “நாங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றோம்” எனக் கூறியுள்ளார். இப்படி இருவரும் ஜாலியாக மாறி மாறி கலாய்த்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments