Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா விருதுகளால் சுசீந்திரன் வருத்தம்

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (20:40 IST)
தன்னுடைய படங்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்படாததால், வருத்தத்தில் இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.


 
 
நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. அதிலும் நிலுவை வைத்து, 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான படங்களுக்கு மட்டுமே விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதிலும் சில முரண்பாடுகள் இருப்பதாகக் குரல்கள் எழுந்துள்ளன. விருதுகள் குறித்து இயக்குனர் சுசீந்திரன், தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
 
“நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரை உலகிற்கு விருதுகள் அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதில், என்னுடைய படங்களை எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு, தேர்வுக் குழுவினருக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தேசிய விருது பெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ மற்றும் அனைவராலும் பாராட்டைப் பெற்ற ‘நான் மகான் அல்ல’ கிளைமாக்ஸ் ஃபைட்டை இயக்கிய அனல் அரசுவைத் தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. விருதுகள் பெற இருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் சுசீந்திரன்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments