Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய சிம்பு பட இயக்குனர் தலைமறைவு!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (07:45 IST)
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், திமுகவில் பொறுப்பில் இருந்தவருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு உருவானது. இதனால் அவர் தயாரித்து வந்த 8 திரைப்படங்களை சேர்ந்த கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதே போன்ற போதைப் பொருள் விவகாரம் தற்போது தெலுங்கு திரையுலகிலும் பீதியைக் கிளப்பியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனரான கிரிஷ் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் இப்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரின் போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிம்பு நடித்த வானம் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவர விருக்கும்'கடம்பான்பாறை'!

சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் "சீரன்" திரைப்படம்!!

பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" திரைப்படம் - பூஜையுடன் துவங்கியது!!

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments