Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஹீரோவாகும் ஜெயம் ராஜா

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:00 IST)
ஜெயம் படத்தின் மூலம் இயக்குனரான ராஜாவுக்கு ஜெயம் அடைமொழியாக அமைந்துவிட்டது. தற்போது தனி ஒருவன் படத்தை தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்து வருகிறார்.
 
இந்தப் படத்துக்கு முன்பு, என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் ஜெயம் ராஜா ஹீரோவாக நடித்தார். இப்போது மீண்டும் ஒரு ஹீரோ வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
 
ராம்கியை வைத்து ‘பாஸ்மார்க்’ என்ற படத்தை இயக்கிய பாலாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் நடுத்தர வயதுடைய ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஜெயம் ராஜா நடிக்கிறார். 
 
இந்த கதையை கேட்டவுடனேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஜெயம் ராஜா. ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். இப்படத்தை ஜெயசீலன் என்பவர் தயாரிக்கிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments