Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அபாயகரமான பகுதியில் படமாக உள்ள அஜீத் படம்

அபாயகரமான பகுதியில் படமாக உள்ள அஜீத் படம்
, ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (14:22 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இதுவரை சென்னையில் நடந்து வந்தது. படத்தின் முக்கியமான காட்சிகளை இந்தோ - திபெத் எல்லையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

கடத்தல்காரர்கள் இந்தோ - திபெத் எல்லை வழியாக ஊடுருவுவதால் அப்பகுதியில் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அபாயகரமான பதட்டமான பகுதி அது. அங்கு படப்பிடிப்பு நடத்துவதென்றால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

கௌதம் இங்கு சில காட்சிகளை படமாக்க விரும்புகிறார். அதற்காக மத்திய அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர். அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil