Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமிதாப் பச்சனுக்காக எழுதிய கதையில் ரஜினி! விரைவில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:26 IST)
இயக்குனர் பால்கி சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து அவருக்கு ஒரு கதையை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து உடனடியாக ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் பல இயக்குனர்களிடம் கதைக் கேட்டு வருகிறாராம். அந்த இயக்குனர்கள் பட்டியலில் இப்போது பாலிவுட் இயக்குனரான பால்கியின் பெயரும் இருக்கிறதாம்.

பால்கி சமீபத்தில் சென்னையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து கதையை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கதைக்கு ரஜினியும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கதையை இயக்குனர் பால்கி தனது அபிமான நடிகரான அமிதாப் பச்சனுக்காக எழுதியதாகவும், இப்போது அதை ரஜினிக்கு சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லும் பட்சத்தில் 28 வருடங்களுக்கு பிறகு ரஜினி இளையராஜா காம்பினேஷன் உருவாக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பால்கி தன்னுடைய எல்லா படத்துக்கும் இளையராஜாவையே இசையமைப்பாளராக பயன்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அடுத்தவங்க துக்கத்திலும் காசு பார்த்தே ஆகணுமா? - ஊடகங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதம்!

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments