Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் நரேனும் அம்பேத்கரும் – முகநூலில் எழுந்த எதிர்ப்பு !

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (10:51 IST)
கார்த்திக் நரேன் தனது படங்களில் அம்பேத்கரை இழிவு செய்வதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

நேற்று கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவான மாஃபியா திரைப்படம் வெளியானது. கதையே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள படம் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் படத்தின் மீது அரசியல் ரீதியாக ஒரு விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது.

அவர் தன்னுடைய முதல்படமான துருவங்கள் 16 –ல் வில்லன் வசிக்கும் இடத்துக்கு அம்பேத்கர் நகர் எனப் பெயர் வைத்திருப்பார். ஆனால் தமிழகத்தில் அவ்வளவு வசதியாக் மாளிகை போன்ற வீடுகள் இருக்கும் எந்த பகுதிக்குமே அந்த பெயர் வைக்கப்பட்டதில்லை. உழைக்கும் மக்களும் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் பகுதிகளிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் வாழும் பகுதிகள்தான் அம்பேத்கர் பெயரைத் தாங்கி நிற்பவை. இது சம்மந்தமாக அந்த பட ரிலீஸின் போதே சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் மாஃபியா படத்திலும் அது போல ஒரு காட்சியை அவர் வைத்துள்ளார். வில்லன் தனது போதைப் பொருட்களை பதுக்கும் ஏரியாவில் அம்பேத்கரின் படம் இடம்பெற்று இருக்கும். இதனால் அவர் தொடர்ந்து அம்பேத்கரை இழிவு செய்கிறார் என முகநூலில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments