திவ்யதர்ஷினி விவகாரத்து முடிவு.... உண்மை என்ன?
திவ்யதர்ஷினி விவகாரத்து முடிவு.... உண்மை என்ன?
தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய தீர்மானித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், உண்மை என்ன?
திவ்யதர்ஷினி - ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் திருமணம் கடந்த 2014 இல் நடந்தது. ஸ்ரீகாந்த் கௌதமின் உதவி இயக்குனர். இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை, இதுபோன்ற வதந்திகள் எப்படி வருகின்றன என்றே தெரியவில்லை என திவ்யதர்ஷினியின் தரப்பு கூறியுள்ளது.
ஆனால், ஊடகங்களில் இப்படியொரு செய்தி வந்தும் திவ்யதர்ஷினியோ, ஸ்ரீகாந்தே நேரடியாக மறுப்பு ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.