Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெருக்கூத்துக்கு பெருமை சேர்க்கும் தரணி - புரிசை கண்ணப்ப தம்பிரானின் மகன் நடிக்கிறார்

தெருக்கூத்துக்கு பெருமை சேர்க்கும் தரணி - புரிசை கண்ணப்ப தம்பிரானின் மகன் நடிக்கிறார்
, புதன், 12 நவம்பர் 2014 (10:50 IST)
தமிழ் நாட்டின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் புரிசை கண்ணப்ப தம்பிரான். தெருக்கூத்து என்ற கலை வடிவத்தை தண்ணி ஊற்றி தப்பிப்பிழைக்க வைத்த மகான். அவர் இறந்த போது சின்ன பெட்டி செய்தியாகக்கூட ஊடகங்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. வெகுஜனங்களுக்கு அப்படியொருவர் இருப்பதே தெரியாது.
அவரது மகன் புரிசை கண்ணப்ப சம்பந்தம் ஒரு படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார். படம் தரணி.
 
மூன்று மனிதர்களைப் பற்றிய, மூன்று காலகட்டங்களில் நடக்கிற கதை, தரணி. இதில் ஒருகதை தெருக்கூத்தைப் பற்றியது. வழக்கொழிந்து வரும் அக்கலையை சினிமா மூலம் புத்துயிரூட்டும் இயக்குனர் குகன் சம்பந்தம் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். 
 
குமரவேல் நாயகனாக நடிக்க ஆரி, அஜய் கிருஷ்ணா கதை நாயகர்களாக வருகிறார்கள். வருணிகா, சாண்ட்ரா என்று இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
 
இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil