Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடம்பிடித்த தனுஷ்; மறுத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (11:18 IST)
இயக்குனர் பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்படத்தை ரஜினியின் மருமுகனும்,  நடிகருமான தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்து, அதற்கான முதற்கட்ட பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
தனுஷ், இசையமைப்பாளர் அனிருதை பிரிந்த பிறகு இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு ஆதரவு அளித்து வருவதுடன்  தனது படங்களில் வாய்ப்பும் அளிக்கிறார். கபாலி படத்தை போன்றே தனது இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஆக்க விரும்பியுள்ளார் ரஞ்சித். தனுஷோ தனக்கு பிடித்த ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக்க  வேண்டும் என்று ரஞ்சித்திடம் கூறியுள்ளார்.
 
எனக்கு சந்தோஷ் தான் சரிப்பட்டு வருவார், என்று தனுஷிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி சந்தோஷையே ஒப்பந்தம்  செய்துள்ளாராம். மாமா ரஜினியின் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார் தனுஷ். என் கதைப்படி அது  சரிவராது. உங்களுக்காக நான் கதையை மாற்ற மாட்டேன் என்று ரஞ்சித் தன் முடிவை சொல்லிவிட்டாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் சீக்கிரமே இயக்குனர்… எனக்கும் ஒரு வாய்ப்புண்டு – பார்த்திபன் மகிழ்ச்சி!

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments