Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (10:57 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடக்கவுள்ளது.

இதற்கிடையில் சில முக்கியமானக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மீண்டும் தேனிக்கு செல்கிறது. நாளை மறுநாள் முதல் அங்கு 10 நாட்களுக்கு ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும், அதன் பிறகு பாங்காங் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் என்னை காமெடி வேடத்தில் நடிக்கக் கூப்பிட மாட்டார்- சூரி ஓபன் டாக்!

இலங்கையில் நடக்கும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!

திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள வைரமுத்து… தலைப்பை வெளியிட்டு நெகிழ்ச்சி!

நாயகன் படத்தில் கிடைத்த சிறு பொறிதான் ‘தக் லைஃப்’.. மணிரத்னம் பகிர்வு!

அப்துல் கலாம் பயோபிக் படமான ‘கலாம்’-ல் கதாநாயகனாக தனுஷ்… கேன்ஸ் விழாவில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments